Saturday, December 19, 2009

எழுத்தறிவித்தவர்க்கு...

கண்களில் கண்ட கனவுகள் எல்லாம்
கண் முன் நிஜமாக்கி வைத்தாய்..
கண் மூடித்திறக்கும் முன்
நிந்தன் கண் திறந்தே சென்று விட்டாய்...

வாழ்க்கையில் கண்ட சரிவுகள் எல்லாம்
தோள்களில் தாங்கி உயரச்செய்தாய்..
அத்தோள்களில் வளர்ந்த பிள்ளையின் முகம் கண்டு
அவன் மார்பிலேயே சாய்ந்துவிட்டாய்...

சேய் பேசக்காத்திருந்த உன் செவியினில், அதன்
முதல் வார்த்தை விழ சட்டென்று முகம் மலர்ந்தாய்..
இன்று நீ பேசக் காத்திருக்கும் செவிகளில்
மெளனத்தை மட்டுமே மொழியாக்கி வைத்தாய்...

இதயத்தின் துடிப்பை உன்னில் நிறுத்தி விட்டு
உயிரின் துடிப்பை இங்கே தந்து சென்றாய்..
உன்னுடன் வாழும் விதியை தூக்கிச்சென்று
உன்னைப்போல் வாழும் வழியைக் காட்டிச்சென்றாய்...

இருந்தாய் என்பதை ஒப்புக்கொள்ள வார்த்தையும் இல்லை,
இல்லை என்பதை புரிய வைக்க இங்கே ஓர் மொழியும் இல்லை!

Thursday, November 12, 2009

Uyirin thedal...

Uyirudan ennai kandavargalukkellam
ennavendru kooruven,
nee illai en arugile endru!!

Saturday, April 25, 2009

காதல் வளர்ந்தது

மண்ணில் புதைந்த விதை போல
என் மனதினில் புதைந்து விட்டாய்..
சாரல் வளர்க்கும் செடி போல
என் காதலை வளர்த்து விட்டாய்...

வேர் வரை சென்று பாய்ந்தது
அந்த நீரின் நதி..
என் உயிர் வரை சென்று ஒலித்தது
நீ பேசிய முதல் வரி...

காற்றை எதிர்பார்த்து நிற்கும் கொடி போல,
நீ வரும் வழி பார்த்து நின்றிருந்தேன்..
வந்ததும் முகம் சாய்க்கும் அதன் குணம் போல
நீ வந்ததும் தலை சாய்த்துக்கிடந்தேன்...

காட்டினை எரித்த தீ போல
என் உயிரினைச்சுட்டெரித்த நீ,
என்னுள் விதைந்த தடமும் தெரியவில்லை
வளர்ந்த விதமும் புரியவில்லை!!

நிலவா? நீயா?

நிலவினை நிலவாகப் பார்க்கும் பிறர்க்கு
எவ்வாறு புரிய வைப்பேன்...
அது எனக்கு நீயாகத் தெரிகிறாய் என்று!

சிற்பியா நான்?

சிலையை வடித்த சிற்பிக்குப்புரியும், அது உடைந்ததன் வலி..
காதலை என் உயிரில் செதுக்கிய எனக்குத்தெரியும்,
என் காதல் சிதைந்ததன் வலி!

குழம்புகிறேன்

எனக்கு விளங்கவில்லை..
உன்னையும் என்னையும் பார்க்கும் முன்,
இவ்வுலகில் காதல் எங்கிருந்து வந்ததென்று!

கவிஞன்

கவிதை வராத கவிஞன்போல் ஆகிவிட்டேன்,
கனவில் வராத உன்னை நினைத்து...
நேரில் ஒரு முறை வந்துவிடு..
என் கவிதையும் மலர ஓர் வார்த்தை தந்துவிடு!

ஒரு சொல்...

உன் ஒரு சொல்லில் உயிர் வளர்கிறேன்...
மற்றவை உன் கையில்..
வார்த்தையா மௌனமா?!

Thursday, March 5, 2009

உனக்காக..

வருவாய் என திறந்து வைத்தேன் கண்களின் விழியை ,
வந்ததும் மறந்து விட்டேன் வார்த்தையின் மொழியை..
சென்றதும் உணர்ந்திருந்தேன் காதலின் வலியை,
இருந்தும் எதிர்பாத்திருந்தேன் நீ திரும்பும் வழியை...

நீ என் அருகில் இருக்க,
நினைத்தேன் சுற்றும் உலகை நிறுத்த..
மறுமுறை ஒருமுறை பிறக்க,
நினைத்தேன் உன் மடியில் இறக்க...

நிஜத்தினில் சென்றாலும் கனவினில் வந்துவிட்டாய்,
நான் உயிர் வாழ ஓர் வழியும் தந்துவிட்டாய்...
வார்த்தையில் விளங்காதை எல்லாம் ஓர் பார்வையில் விளக்கி விட்டாய்,
சில வார்த்தைகளை பேசி, என்னை மௌனமாக்கிவிட்டாய்..

நினைத்திருந்தேன் உன்னை மறக்க,
மறந்திருந்தேன் என்னை நினைக்க..
ஏனெனில் உன்னை பிரியும் ஒவ்வோர் கணம்,
நிச்சியமாக நான் ஓர் நடைபிணம்......!!!